சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு – மாலை நிலவரம்!
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்து மற்றும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.35,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. மேலும் நகை கடைகளில் கூட்டம் அதிகமாகவே உள்ளது. தினசரி தங்கத்தின் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது. தங்க விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டுள்ளனர். முதலில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இரண்டாம் வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களிலும் ஓரளவுக்கு தங்கம் விலை குறைக்கப்பட்டு வந்தது.
திருப்பதியில் இலவச தரிசனம் துவக்கம் – செப்.25 முதல் ஆன்லைன் டிக்கெட் விநியோகம்!
இந்நிலையில் நேற்றும் இன்றும் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (செப்டம்பர் 22) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,410 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று தங்கத்தின் விலை 4,371 ரூபாயாக இருந்தது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 34,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 312 ரூபாய் உயர்ந்து 35,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் இந்தாண்டே அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!
தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 4,735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,774 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 312 ரூபாய் உயர்ந்து 38,192 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.64.10 ஆக இருந்தது. இன்று அது ரூ.65.01 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.