சென்னையில் கிடுகிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் தங்க நகை விலை எவ்வளவு இருந்தாலும் அதை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில் நகைப்பிரியர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்க விலை நிலவரம்:
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் மக்கள் பலர் தங்களுடைய முதலீட்டை செலுத்தி வருகின்றனர். பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. தங்கத்தில் முதலீடு செய்வதால் அது பாதுகாப்பானதாகவும் அதிக லாபத்தை ஈட்டுவதாகவும், பாதிப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறது. அதனால் மக்கள் பலர் நகை வாங்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் நாளுக்கு நாள் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது உக்ரைன், ரஷ்யா இடையே போர் நிலவி வருவதால் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருந்தது. ஆனால் தற்போது உக்ரைன் அதிபர் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது திட்டமிட்டபடி நடத்தப்பட்டால் இது விரைவில் சுமூக நிலையை எட்ட வழிவகுக்கலாம் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதனால் தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – இனி பணம் அனுப்புவது ஈஸி!
மேலும் தினசரி தங்கம் விலையில் உள்ள மாறுதல்களை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதன்படி இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.4,805-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.66.20-க்கு விற்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.