தீபாவளியை முன்னிட்டு கிடு கிடுவென உயரும் தங்கம் Rate – இன்றைய நிலவரம்..!
தமிழகத்தில் தங்கம் விலையானது நேற்று வரை குறைந்து வந்த நிலையில், இன்று கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை:
நாடு முழுவதும் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தங்கம் விலையாகும். தங்கத்தை வெறும் அலங்கார பொருளாக பார்க்காமல், எதிர்கால தேவைக்கு பயன்படும் நல்ல சொத்தாக பார்க்கப்படுகிறது. அதனால் ஒரு குடும்பத்தில் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தால், அவருக்கு தங்கம் கொடுத்து அனுப்பும் பழக்கம் இருந்து வருகிறது. மேலும் பணம் இருக்கும் போது அதனை தங்கத்தில் முதலீடு செய்து வைத்தால், அதன் மதிப்பு ஏற ஏற அதிகம் லாபம் கிடைக்கிறது.
அதனால் தங்கத்தின் விலையில் எவ்வளவு மாற்றம் இருந்தாலும் மக்கள் பலர் தங்கம் வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று வரை தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது. அதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதியில் தங்கம் வாங்க கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
கவனம் மக்களே.. தமிழகத்தில் அக்.15 மின்தடை – கரண்ட் இருக்கும் போதே வேலைய முடிச்சிருங்க!
Exams Daily Mobile App Download
அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 10 உயர்ந்து, ரூ.4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 50 காசுகள் குறைந்து ரூ.62.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 41,368 விற்பனை செய்யப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்