சபரிமலை தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சுவாமி தங்க அங்கிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
சபரிமலை:
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முன்பதிவு டிக்கெட்கள் அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தரிசனத்திற்கு பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – NEET இலவச பயிற்சி! ஜனவரியில் தொடக்கம்!
இந்த நிலையில் சபரி மலையில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவர். அதனால் இந்த மாதம் முன்பதிவு அடிப்படையில் தினசரி 50,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்காக ஸ்பாட் புக்கிங் என்ற உடனடி டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. பூஜை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக தங்க அங்கி இன்று பம்பை கணபதி கோவில் வந்தடைந்தது.
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வட்டி விகிதம் குறைப்பு!
இந்த தங்க அங்கி 18ஆம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பிறகு சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு வழக்கம் போல கோவில் நடை சாத்தப்படும். தற்போது நடைபெற்று வரும் பூஜைகளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். மேலும் சிறப்பு வாய்ந்த மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.