தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி? விபரங்கள் சேகரிப்பு தீவிரம்!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை 5 சவரன் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுள்ள நகைகளை வைத்து நகை கடன் பெற்றவர்களில் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
நகை கடன் :
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்குகிறது. சுயதொழில் தொடங்க, தொழிலை மேம்படுத்த, விவசாய பயிர் கடன் போன்ற தேவைகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில், விவசாய நகை கடன் வழங்கப்படுகிறது. இதனை முறையாக திரும்ப செலுத்துவோருக்கு, மானியம் வழங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.
IND vs ENG 2வது டெஸ்ட் போட்டி – அதிகளவு ரன்களை விளாசிய ரோஹித் சர்மா! குவியும் வாழ்த்துக்கள்!
அதில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. நகைக் கடன் பெற்றவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசு பணிகளில் இருந்தால் அவர்கள் பெற்ற நகைக் கடனை தள்ளுபடி பட்டியலுக்குள் வராது என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நகை கடன் தள்ளுபடியை வைத்து முறைகேடுகளில் ஈடுபடுபவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை 5 சவரன் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுள்ள நகைகளை வைத்து நகை கடன் பெற்றவர்களில் விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியர்கள், கூட்டுறவு நிறுவன பணியாளர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பெரு விவசாயிகள், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன் வைத்திருப்பவர்கள்.சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கார் வைத்திருப்பவர்கள் என பிரித்து கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.