தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அதிமுக போராட்டம்!
தமிழகத்தில் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது பல்வேறு நிபந்தனைகளின் பேரில் சிலருக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன் பின்னர் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு காரணமாக நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகள் அரசால் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளது மற்றும் போலி நகைகள் மூலம் நகைக்கடன் பெற்றது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
நாடு முழுவதும் 2022 ஜனவரி மாத விடுமுறை தினங்கள் எத்தனை? முழு பட்டியல் இதோ!
அந்த வகையில் நகைக்கடன் தள்ளுபடி பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியுடையவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் பெயர் பட்டியல் மட்டும் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டது. ஆனாலும் இதுவரையில் எவ்வித நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிவிட்டு தற்போது சிலருக்கு மட்டும் தள்ளுபடி வழங்கியுள்ளது என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – அறங்காவலர் குழு தலைவர் முக்கிய அறிவிப்பு!
இது குறித்து திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததைப் போல் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ள அனைவருக்கும் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பெட்ரோல் & டீசல் விலை உயர்வு, கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.