தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, புதிய ரேஷன் கார்டுகள் – அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் புதிதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்போருக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் அ.சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதிய குடும்ப அட்டைகள்:
தமிழகத்தில் பொள்ளாச்சி மரபேட்டை முதல் உடுமலைபேட்டை சாலையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக பசுமை வாகன பேரணி நடைபெற்றது. இதனை தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அ.சக்கரபாணி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்கள் நலுனுக்காக திமுக இதுவரை அறிவித்த 505 வாக்குறுதி திட்டங்களில் 200 திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில் விவசாயிகள் நலன் கருதி பட்ஜெட் தாக்களில் முதன் முதலாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வேளாண் பட்ஜெட் மூலம் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Reliance Jio நிறுவனத்தின் ரூ.50க்கும் குறைவான திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மேலும் நெல் மற்றும் கரும்பிற்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தொகைக்கு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதனை தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த ஏற்பாடுகள் கூட்டுறவு வங்கிகளில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்போருக்கு அடுத்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு கிடையாது – கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!
இதுவரை 7 லட்சம் குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்கும் நிகழ்வை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அடுத்ததாக தேங்காய் எண்ணெய் விற்க ஏற்பாடு செய்யுமாறு தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்து கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். மேலும் மழைக்காலங்களில் மழைநீர் கடலில் கலக்காமல் சேமிக்கும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்துவதற்கு 1,650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.