தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதன் முழு விவரத்தையும் கீழே வரும் தொகுப்பில் பார்ப்போம்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் அந்த திட்டத்தை அமல்படுத்தி விட்டனர். அந்த வழிகாட்டுதலின்படி, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 110 விதி கீழ் ஐந்து சவரனுக்குள் நகைக் கடன் வாங்கியவர்களுக்கு, கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI அறிக்கை!

இந்த நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் 14.60 லட்சம் நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறியிருந்தார். அதனை தொடர்ந்து நேற்று மட்டும் தமிழகத்தில் 1.03 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, ஆவணங்களும், நகைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அந்த சமயத்தில் அமைச்சர் சில தகவல்களையும் தெரிவித்து இருந்தார். அதாவது, நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 14,51,042 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடி அளவிற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12,19,106 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களது ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள், அருப்புக்கோட்டை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம் என்றும் அறிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!