தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – பிப்.25ம் தேதி முதல்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். மேலும் இது தொடர்பான முக்கிய தகவல்களை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110 என்பதன் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டது. இந்த முறைகேடுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
விஜய் டிவி “ராஜா ராணி 2” ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
இதில் குறிப்பாக போலி நகைகளை கொண்டு கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகைக்கடன்களை பெறுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடத்தினர். இதற்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனால் பெறப்பட்ட 48,84,726 விண்ணப்பங்களை கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு தகுதியான நபர்களை கண்டறிந்து தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தது. இதில் 35,37,693 நபர்கள் தள்ளுபடிக்கு தகுதியற்ற நபர்கள் என்று கண்டறியப்பட்டது.
அத்துடன் தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படாத பகுதியில் நகைக்கடன் தள்ளுபடியை செயல்படுத்த வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதில் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கிராமப்பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நகர்ப்புற பகுதிகளில் தேர்தல் முடிந்த பின் அத்துடன் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு பிப்ரவரி 25ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.