தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஆய்வு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிர் கடன், நகை கடன்கள் குறித்து அக்டோபர் 22 ம் தேதி கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அமைச்சர் ஆய்வு :
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வாங்கிய நகைக்கடன்கள், பயிர்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நகைக்கடன்கள், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு குறித்து மக்கள் எதிர்பார்த்து வந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்களின் மொத்த நகைக்கடன் 85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.
Amazon Prime மெம்பர்ஷிப் கட்டணம் திடீர் அதிகரிப்பு – பயனர்கள் அதிர்ச்சி! புதிய கட்டண விபரம்!
தற்போது அரசு உள்ள நிதி நெருக்கடியில் மொத்த கடன்களையும் தள்ளுபடி செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது. அதனால் அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய திட்டமிட்டபட்டு கடன் பெற்றவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சேகரிக்கப்படும் விவரங்கள் தலைமை செயலகத்திற்கு கணினி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்க அதிகாரிகள் கடன் வாங்கியவர்களிடம் விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது நகைக்கடன்கள் வழங்கியதில் பல்வேறு மோசடிகளை நடைபெற்றிருந்தது கண்டறியப்பட்டது.
L & T Infotech நிறுவனத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு – வெளியான தகவல்!
இதனால் மோசடிகளை குறித்து ஆராய மாவட்டம் தோறும் ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதில் முறைகேட்டை தடுக்க, புதிய விதிகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 22 ஆம் தேதி கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
When will complete the work?