தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – லஞ்சம் வாங்கிய அதிகாரி! அரசு அதிரடி உத்தரவு!
நகைக்கடன் தள்ளுபடிக்கு தேர்வான பயனாளியிடம் 2000 ரூபாய் பணம் செலுத்தினால் மட்டுமே நகையை ஒப்படைக்க முடியும் என கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் லஞ்சம் கேட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நகைக்கடன் தள்ளுபடி:
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கும் குறைவாக அடகு வைத்திருக்கும் ஏழை விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதாக சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நகைக்கடன் தள்ளுபடியில் சில முறைகேடுகள் நடைபெற்றதால் சில நிபந்தனைகள் புகுத்தப்பட்டது. அனைத்து நிபந்தனைகளுக்கு உட்படுபவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைத்த 13.37 லட்ச ஏழை எளிய மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பேளுக்குறிச்சியில் நகைக் கடன் தள்ளுபடி பெற தேர்வான பயனாளியிடம் 2 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தால் மட்டுமே நகைகளை ஒப்படைக்க முடியும் என கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஒருவர் லஞ்சம் கேட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் நீ என்னுடைய உறவினர் என்பதால் மட்டுமே 2000 ரூபாய் கேட்கிறேன். மற்றவர்களுக்கெல்லாம் 4 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி கொண்டிருக்கிறோம். நீங்கள் செலுத்தும் பணத்தில் இருந்து உயர் அதிகாரிகளுக்கும் நாங்கள் பணம் அனுப்ப வேண்டும் என கூறுகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானதை தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் கோவிந்தனை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.