தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – அரசு சொன்ன ஹாப்பி நியூஸ்!

0
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி - அரசு சொன்ன ஹாப்பி நியூஸ்!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி - அரசு சொன்ன ஹாப்பி நியூஸ்!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – அரசு சொன்ன ஹாப்பி நியூஸ்!

தமிழகத்தில் 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி,கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஹாப்பி நியூஸ்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு வெளியிட்டது. இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது, முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு மே மாதம் பதவி ஏற்றார். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிய நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இருப்பினும் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் அளவிலான நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்

இந்திய அஞ்சல்துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் உள்ளாட்சி தேர்தல் சில கிராமப்புற பகுதிகளில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பிரசாரம் செய்தார். அப்போது அவர் 5 சவரன் வரையிலான நகைகளுக்கு கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும்,அடகு வைக்கப்பட்டிருக்கும் நகைகளைத் வரும் 25 ஆம் தேதி முதல் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 23ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

மேலும் தேர்தல் நடைபெறாத கிராமப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு திரும்ப வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளன மற்றும் அடகு வைக்கப்பட்ட நகைகள், நகர்ப்புறப் பகுதிகளில் தேர்தல் விதிகள் விலக்கிக் கொள்ளப் பட்ட பின்பு,வரும் 25 ஆம் தேதி முதல் திருப்பி வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டார். இந்த அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஆகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!