தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி – 13 லட்சம் பேர் தகுதியற்றவர்கள்!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி - 13 லட்சம் பேர் தகுதியற்றவர்கள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி - 13 லட்சம் பேர் தகுதியற்றவர்கள்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி – 13 லட்சம் பேர் தகுதியற்றவர்கள்!

தமிழக கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ள நிலையில் தற்போது 13 லட்சம் பேர் நகைக்கடன் தள்ளுபடி செய்ய தகுதியற்றவர்கள் என்று திமுக அரசு கூறியுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

நகைக்கடன்:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு நிபந்தைகளும் வரையறை செய்யப்பட்டது. அந்த நிபந்தனைகளின் படி தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி நகைக்கடன் தகுதியானோர் மற்றும் தகுதியற்றோர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 200 காலிப்பணியிடங்கள்

அதில் நகைக்கடன் பெற்றதில் பாதிக்கும் மேற்பட்டோர் தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆட்சிக்கு வரும்போது அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்யாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறுகின்றனர். வாக்குறுதி அளித்தபடி அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அளவில் நகைக்கடன் பெற்ற அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

இந்த நிலையில் நடைபெற போகும் நகர்ப்புற தேர்தலுக்காக விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது 5 பவுன் நகை வங்கியில் அடமானம் வைத்தவர்கள் கடன்கள் ரத்து செய்யப்படும் என கூறினார்கள். வங்கியில் 45 லட்சம் பேர் 5 பவுன் நகை அடகு வைத்து உள்ளனர். இதில் 13 லட்சம் பேர்தான் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என திமுக அரசு அறிவித்தது. இதனால் மற்றவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!