தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் வலியுறுத்தல்!
தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் வாங்கிய அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேனி மாவட்டத்தில் பெண்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நகைக்கடன்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்று நகைக்கடன் தள்ளுபடி. தமிழக கூட்டுறவு சங்கங்களின் 5 பவுன் அளவுள்ள நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வாங்கியவர்கள் குறித்த 51 வகையான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றது.
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவருக்கு மட்டுமே அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!
சேகரிக்கும் விவரங்கள் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார். இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் போலியான நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது போக பல்வேறு மோசடிகள் நடந்திருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு மாவட்டம் தோறும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்கியது குறித்து ஆய்வு செய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நவ. 28ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!
அதன் தொடர்ச்சியாக 2021 மார்ச் 31ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி கூட்டுறவு வங்கியில் 461 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியற்றவர்கள் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏராளமானோர் குறிப்பாக பெண்கள் தங்களுக்கு தகுதி இருந்தும் தகுதியற்றவர் பட்டியலில் இருப்பதாக கூறி கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல்வர் தேர்தலில் வாக்குறுதியில் சொன்னபடி அனைவரது நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.