கோபியின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளும் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம்!

0
கோபியின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளும் குடும்பம் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அதிரடி திருப்பம்!
கோபியின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளும் குடும்பம் - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அதிரடி திருப்பம்!
கோபியின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளும் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி பற்றிய உண்மைகளை தனது குடும்பத்தாரிடம் சொல்லி அவரது முகத்திரையை கிழிக்கும் பாக்கியா அடுத்து எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல்:

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த கதைக்களம் தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இடம்பிடித்து வருகிறது. அதாவது, பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, பல நாட்களாக குடும்பத்தை, மனைவியை, பிள்ளைகளை ஏமாற்றி பாலிய கால காதலி ராதிகாவுடன் பழகி வந்த கோபியின் நடவடிக்கைக்கு இப்போது ஒரு முடிவு கிடைத்துள்ளது. அந்த வகையில் மருத்துவமனையில் வைத்து ராதிகாவுடன் கோபியை சேர்த்து பார்க்கும் பாக்கியா எப்போதும் போல அமைதியாக இல்லாமல் ஒரு புயலாக கிளம்பி கோபியை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

மறுபக்கத்தில், கோபி அப்படிப்பட்டவன் இல்லை என்று அவரது அம்மா ஈஸ்வரி உறுதியாக நம்புகிறார். அதே போல செழியனும் தன் அப்பா தவறு செய்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறார். ஆனால், தன்னுடைய குட்டு வெளிப்பட்டுவிட்டது என்பதை அறிந்த கோபி வாயை திறக்காமல் மவுனம் சாதிக்கிறார். இது தொடர்பான எபிசோடுகள் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வார எபிசோடில் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கிறது. இப்போது கோபியுடன் பழகுவது ராதிகா என்ற உண்மையை பாக்கியா சொன்னால் அவர்கள் நம்புவார்களா என்ற எதிர்பார்ப்பில் அடுத்த கட்ட கதைக்களம் நகர இருக்கிறது.

வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

அந்த வகையில் கோபியின் காதல் விஷயத்தை பாக்கியா சொல்லும் போது இதுவரை கோபியை ஒரு ஹீரோவாக, சிறந்த அப்பாவாக பார்த்த செழியன் மற்றும் இனியா இருவரும் அவரை வெறுத்து விடுவார்களா அல்லது தனது அப்பா என்பதால் அவரை ஏற்றுக்கொள்வார்களா என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் கோபி இந்த தவறை செய்திருக்க மட்டார் என்று எண்ணும் ஈஸ்வரி இந்த உண்மையை எப்படி தாங்கிக்கொள்ள போகிறார், அவருக்கு என்ன தண்டனை கொடுப்பார் என்பது போல சீரியல் நகருமா என ரசிகர்கள் மத்தியில் பேராவல் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!