பாக்கியாவை ஏமாற்றியதற்காக கோபிக்கு கிடைத்த தண்டனை – வைரலாகும் பதிவு!
பாக்கியலட்சுமி தொடரில் கோபியும், பாக்கியாவும் இனி ஒன்று சேரவே மாட்டார்களா என எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ் வீடியோ ஒன்றை சமூக வலைப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்போது டாப் ஹிட்டாகி கொண்டிருக்கிறது. கடந்த 2 வாரமாகவே தொடர்ந்து பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து திருப்பங்களாய் சென்று கொண்டிருக்கிறது. முதலில் ராதிகாவுக்கு உண்மை தெரியவந்தது. பின்பு, ராஜேஷ் கோபியின் வீட்டிற்கு சென்று சண்டை போட்டார்.
Exams Daily Mobile App Download
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குடும்பத்தினர்கள் விழித்து கொண்டிருக்கும் சமயத்தில் கோபிக்கு ஆக்சிடன்ட் ஆகிவிட்டது. பின்பு, உடனே பாக்கியாவிற்கு உண்மைகள் அனைத்தும் தெரிந்துவிட்டது. இதற்குப் பிறகு பாக்கியா சண்டை போட்டு வீட்டை விட்டே கிளம்பினார். இதற்குப் பிறகு பாக்கியாவுடன் கோபி சேரவே மாட்டாரா எனவும், ராதிகாவிற்கும் கோபிக்கும் திருமணம் முடிந்துவிடுமா எனவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் கோபியின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஸ்க்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் பலரும் இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பியிருக்கின்றனர்.
மத்திய அரசு வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு – தேர்வு கிடையாது !
இந்நிலையில் சதீஸ் இத்தனை நாட்களாக எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. மேலும், அடுத்து ஒரு வாரம் முழுக்கவே ஒரு குற்றவாளியாக உங்கள் முன்பு நிற்க போகிறேன். அதாவது, கோபி அவன் காதலுக்காக பல பொய் மற்றும் பித்தலாட்டங்களை செய்துவிட்டார். வயசானால் காதல் பண்ண கூடாது என்றெல்லாம் சட்டம் இருக்கிறது போல என ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கோபி பேசிய அந்த வீடியோ தான் சமூக வலைப் பக்கங்களில் அதிகமாக உலா வந்து கொண்டிருக்கிறது.