அடுத்த கல்வியாண்டில் NEP கொள்கைப்படி பட்டப்படிப்பு அறிமுகம் – கோவா அரசின் அதிரடி அறிவிப்பு!
தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த தற்போது அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது, கோவா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் NEP கொள்கைப்படி பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படும் என மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கை
நாட்டில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக தேசிய கல்வி கொள்கையை நாடு முழுவதும் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கோவாவில் தேசிய கொள்கையை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இது தொடர்பாக கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது, அடுத்த கல்வியாண்டு முதல் கல்வி நிறுவனங்களில் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) படி ஒரு அடித்தளப் படிப்பு (foundation course) மற்றும் பட்டப்படிப்பு அளவிலான (graduation level course) படிப்பையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜன.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேலும் மாநிலத்தில் தேசிய கல்வி கொள்கையை விரிவுபடுத்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் முதல்வர் தலைமையிலான 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் சேர்ந்து பணியாற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.