ஆன்லைனில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் – மாநில அரசு முடிவு!!
கோவா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாநில இடைநிலைப் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளுக்கு மாநில கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் தேர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை 61,239 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையில் முதற்கட்டமாக பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்பை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜூனியர் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!!
இதே போல ஏற்கனவே 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த சுற்றறிக்கையை மாநிலத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளுக்கு கல்வி இயக்குனர் டிஆர் பகத் அனுப்பியுள்ளார்.