ஏப்ரல் 29 முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!

0
ஏப்ரல் 29 முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!

கோவா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக நாளை (ஏப்ரல் 29) முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு நடைமுறைகளை அறிவித்துள்ளது. மேலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்களுக்கு ஏற்ப விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனால் அனைத்து மாநிலங்களும் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனை தொடர்ந்து கோவாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் புதிதாக 2110 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 31 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்திய பயணிகள் விமான போக்குவரத்திற்கு தடை – குவைத் அரசு நடவடிக்கை!!

இதை கருத்திற்கொண்டு கோவா மாநில அரசு நாளை இரவு 7 மணி முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு என அம்மாநிலத்தின் முதல்வர் பிரமோத் அறிவித்துள்ளார். மேலும் கோவாவில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிட்டதக்கது. ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்திற்கு அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது. அத்யாவசிய சேவைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!