ஜூலை 5 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன் ஜூலை 5ம் தேதி வரை நீட்டிப்பதாக கோவா மாநில அரசு அறிவித்து உள்ளது. மேலும் தற்போது உருமாறி டெல்டா பிளஸ் வைரஸாக பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையை கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து உள்ளன. அந்தந்த மாநிலங்களில் உள்ள பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தளர்வுகள் அளிக்கப்படுகிறது. தமிழகத்திலும் ஏற்கனவே ஜூலை 5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோவா மாநில அரசு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது. இதில் திருமண நிகழ்வுகளுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொலைதூர பேருந்து சேவைகள் – ஜூன் 28 முதல் துவக்கம்?
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அவர்கள் 2021 ஜூலை 05, காலை 7 மணி வரை மாநில அளவிலான முழு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க தனது அரசாங்கம் முடிவு செய்துள்ளது என அறிவித்து உள்ளார். அண்டை மாநிலங்களில் கண்டறியப்பட்ட புதிய டெல்டா பிளஸ் கொரோனா மாறுபாடுகளின் அச்சத்திற்கு மத்தியில், கோவா அரசு மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவை ஜூலை 5 வரை நீட்டித்து உள்ளது.
தமிழகத்தில் வங்கிகளுக்கு செல்வோர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!
மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் விளைவாக மே முதல் கோவா ஊரடங்கு கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மாநிலத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த மாநில அரசு கடந்த வாரம் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. கோவாவில் அனைத்து கடைகளும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மாணவர் சேர்க்கை – ஆன்லைன் பதிவு தொடக்கம்!!
மேலும், கோவாவில் திருமண விழாக்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.