ஜூலை 12 க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு – கோவா முதல்வர்!
கோவா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஜூலை 12ம் தேதிக்கு பின்னர் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அம்மாநில முதல்வர் சாவந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை அதன் முதல் அலையை விட அதிகளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்திய நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுக்கவில்லை. மாறாக மாநிலங்களில் உள்ள பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு அறிவுறுத்தியது. அதன்படி கடந்த மே மாதம் பல்வேறு மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறப்பித்தது.
பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறப்பு? ஹரியானா முதல்வர் தகவல்!
இதில் தொற்று நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டது. இதனால் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் கொரோனா 3 வது அலை, டெல்டா பிளஸ் கொரோனா தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவா மாநிலத்தில் ஜூலை 2ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் போது, உணவகங்கள் மற்றும் பார்கள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வளாகங்களை மீண்டும் திறக்க அம்மாநில முதல்வர் அனுமதித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும் சில காலம் அரசு ஊரடங்கு உத்தரவை தொடர்வது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என முதல்வர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கோவாவில் மாநில அளவிலான ஊரடங்கு உத்தரவின் தற்போதைய கட்டம் ஜூலை 12 ஆம் தேதியுடன் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 12 க்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் போது கூடுதல் தளர்வுகளை வழங்க அரசாங்கம் யோசித்து வருவதாகவும் முதல்வர் அவர்கள் கூறியுள்ளார்.