பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி? மீண்டும் வெடித்த பிரச்சனை – அமைச்சர் விளக்கம்!
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது குறித்து மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து அம்மாநில அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சபரிமலை விவகாரம்:
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஆண்கள் ஐயப்பனுக்கு மாலையிட்டு 48 நாட்கள் விரதம் இருந்து அவரது ஆசியை பெற ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆண்கள் மட்டுமே ஐயப்பன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது அக்கோயிலின் ஐதீகமாக உள்ளது.
டிசம்பர் 5ம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால் பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கான ஆணை பெற்றனர். ஆனால் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனால் தற்போது பெண்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், நவம்பர் 17ம் தேதியான நேற்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வர தொடங்கியுள்ளனர். இதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டி கைபுத்தகத்தில் பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதற்கு பாஜக உள்ளிட்ட தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அதன்பிறகு, இந்த கைப்புத்தகம் 2018ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டது என்றும், இவை மீண்டும் பெறப்பட்டு, தேவையற்ற வாசகங்கள் திருத்தம் செய்யப்பட்டு புதிதாக அச்சடித்து காவல்துறையினருக்கு வழங்கப்படும் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.