நீட் தேர்வு அச்சம் – தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தில் வசிக்கும் மாணவி சௌந்தர்யா என்பவர் நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி தற்கொலை:
இந்தியாவில் மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வானது தமிழக மாணவர்களுக்கு பெரும் சுமையாகவே உள்ளது. 2017 முதல் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்டால் தமிழக அரசு பள்ளி மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்து அரசு பல்வேறு கருத்துகளை முன் வைத்தது.
வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – RBI எச்சரிக்கை!
ஆனாலும் தமிழகத்திற்கு தற்போது வரை நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இந்த நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நீட் அச்சத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மேலும் நேற்று கனிமொழி அரியலூர் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி – இந்த ரேஷன் கார்டுகளுக்கு மறுப்பு?
அவர்களை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யா தோட்டப்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்தார். மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கில் கடந்த 12ம் தேதி நீட் தேர்வு எழுதினார். மாணவி சௌந்தர்யா தேர்வை சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் மதிப்பெண் குறையும். அதனால் அவருக்கு மருத்துவ இட ஒதுக்கீடு கிடைக்காது என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் கூறுகின்றனர்.