உங்கள் மகளின் எதிர்காலத்தை Safety பண்ண.. மத்திய அரசு வழங்கும் முத்தான 3 திட்டங்கள் -விவரம் உள்ளே!
மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்கள் நலனிற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதேபோல், நிதி திட்டங்களையும் அதிக பலன்களுடன் அளிக்கிறது.
நிதி திட்டங்கள்:
நிதி சேமிப்பின் அவசியத்தை மக்கள் உணர்ந்து சமீப காலமாக அதிக அளவிலான சேமிப்பு திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நிறுவனங்களை தவிர்த்து மத்திய அரசும் தற்போது பலவகையான நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் உள்ள 3 முக்கிய திட்டங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனா:
10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை செலுத்த முடியும். 18 அல்லது 21 வயதில் இந்த திட்டத்தை முடித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் 7.6% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இடைநிலைக் கல்வியில் சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத்திட்டம்:
8ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கான திட்டமாக இடைநிலைக் கல்வியில் சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத்திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் ரூ. 3 நிலையான வைப்பு தொகையாக வைக்கப்பட்டு, குழந்தைகளின் 18 வயதில் நிறைவு செய்யப்பட்டு, பணம் மீண்டும் அளிக்கப்படுகிறது.
மாநகராட்சி அலுவலக காலிப்பணியிடங்கள் .. மாநில சீனியாரிட்டி அமல் – புதிய விதிகள்!
Exams Daily Mobile App Download
பாலிகா சம்ரிதி யோஜனா:
1997ம் ஆண்டிற்கு பிறகு பிறந்த நாட்டின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு பாலிகா சம்ரிதி யோஜனா திட்டம் மாநில அரசுகளின் கீழ் செயல்படுகிறது, இந்த திட்டத்தில் பெண் குழந்தை பிறந்த உடன் ரூ.500 ம், 10ம் வகுப்பு வரையில் ஆண்டுக்கு ரூ.300 முதல் ரூ. 1000 வரையும் வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகள் 18 வயதிற்கு பிறகு திருமண அல்லது கல்வி உதவித்தொகை போன்றவற்றையும் பெறுவதற்கான வசதிகள் உள்ளது.