Common Wealth 2022: கானா குத்துச்சண்டை வீரர் இடைநீக்கம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் கானா குத்துச்சண்டை வீரர் போதை மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
CWG 2022 :
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த சுமார் 6500 வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்று உள்ளார்கள். நேற்று முன் தினம் (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் சுமார் 106 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்று விளையாட உள்ளனர். மேலும் பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டனான மன்பிரீத் சிங் ஆகியோர் பர்மிங்காம் 2022 இன் தொடக்க விழாவிற்கான இந்திய அணியின் இணை கொடியை ஏந்திய வீரர்களின் அணிவகுப்பில் நடந்து சென்றனர்.
Exams Daily Mobile App Download
கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்றது. இந்த முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. மேலும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, பளுதூக்கும் வீரர் பஜ்ரங் பூனியா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர் கோஹைன் ஆகியோர் தங்களது பிரிவுகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமைக்கு பதில் ராகி? தகவல் வெளியீடு
இதையடுத்து காமன்வெல்த் கொடியை ஆறு முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஏந்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கானா குத்துச்சண்டை வீரர் ஷாகுல் சமேட், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில், போதை மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் காமன்வெல்த் விளையாட்டு (CWG) அமைப்பாளர்களால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று விளையாட்டுகளின் ஊக்கமருந்து எதிர்ப்பு மற்றும் மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அவரது மாதிரியில் தடை செய்யப்பட்ட பொருள் (டையூரிடிக் மற்றும் முகமூடி முகவர் – ஃபுரோஸ்மைடு) இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என CWG தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.