என்னது…இந்த கிராமத்தில் குடியேறினால் ரூ.50 லட்சம் கிடைக்குமா?- என்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
நாட்டில் இந்த கிராமத்தில் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது மக்கள் இங்கு அதிகமாக குடிபெயர ரூ.50 லட்சம் வரை வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைய என்னென்ன தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சுவிட்சர்லாந்த்
சுவிட்சர்லாந்தில் உள்ள வலாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள அழகிய மலை பள்ளத்தாக்குகள் கொண்ட அல்பினென் கிராமத்தில் குடியேற ஒரு சூப்பரான வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 4,265 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். இதனால் இங்கு மக்கள் தொகை வெகுவாக குறைந்தது.
அதனால் மக்கள் தொகையை அதிகப்படுத்த கடந்த 2018ம் ஆண்டு இந்த கிராமத்தில் குடிபெயரும் குடும்பத்திற்கு £50,000 சுவிஸ் பிராங்குகள் வரை (ரூ.50 லட்சம்) வழங்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் குடிபெயரும் 4 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.50 லட்சம் வரை கிடைக்கும்.
Follow our Instagram for more Latest Updates
இத்திட்டத்தின் கீழ் பயன் அடைய, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும். அத்துடன் அல்பினெனில் கிராமத்தில் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் 200,000 சுவிஸ் பிராங்குகள் (ரூ.1.8 கோடி) மதிப்புள்ள வீட்டில் வசித்து கொண்டிருப்பவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.