தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – தலைமை செயலாளர் பரிந்துரை!
தமிழகத்தில் ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு (AIS) 3 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வுத் தொகையை வழங்க வேண்டும் என அரசுக்கு தலைமை செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
DA உயர்வு
சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18 காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி தொகை இப்போது 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் வரும் ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படியை எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கிடையில் சில மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை உயர்த்தி அறிவித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி (DA) உயர்வை வழங்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்த கடிதத்தில், தமிழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அந்த வகையில் இந்த உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் வகையில், அகில இந்திய பணியாளர் தொகுதி ஊழியர்கள் தற்போது பெற்று வரும் 31% அகவிலைப்படி தொகையை 34 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த உயர்வு அறிவிக்கப்பட்டால் இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.