மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் DA உயர்வு – பொதுச்செயலாளர் தகவல்!

8
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் DA உயர்வு - பொதுச்செயலாளர் தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் DA உயர்வு - பொதுச்செயலாளர் தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் DA உயர்வு – பொதுச்செயலாளர் தகவல்!

கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு, செப்டம்பர் மாதம் முதல் திரும்ப செலுத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நன்மை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் இரண்டு முறை என்ற அளவில் கொடுக்கப்பட்டு வரும் கூடுதல் சலுகையான அகவிலைப்படி (DA) தொகையானது, கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக நாடு முழுவதும் பரவிய கொரோனா நோய் தொற்று காரணமாக மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடியை சந்திக்க போதுமான நிதி இல்லாமையால், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த DA தொகையை அரசு நிறுத்தி வைத்தது.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – View Once அம்சம் அறிமுகம்!

இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது தற்போது குறைந்து வரும் சூழலில் கடந்த 3 தவணைகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதான DA தொகை, வரும் ஜூலை மாதம் முதல் திரும்ப செலுத்தப்படும் என பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா நேற்று (ஜூலை 29) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் – காணொளி வாயிலாக ஆலோசனை!

அப்போது, ‘கடந்த 26, 27 ஆகிய தேதிகளில், டெல்லி வடக்கு பிளாக்கில் மந்திரி சபை செயலாளர் உள்ளிட்ட மற்ற அதிகாரிகளுடன், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் கடந்த ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA உயர்வு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதன் படி தற்போது வரை நிலுவையில் உள்ளதான 3 தவணை DA உயர்வு மற்றும் வரும் ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து மொத்தமாக செப்டம்பர் மாதம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

  1. நாலு மாதமா இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டையே பார்த்து பார்த்து கண்ணு பூத்து போச்சு. சம்பளம் கூடிய பிறகு செய்தி போடுங்கப்பா.

  2. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா நேற்று (ஜூலை 29) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

    ஜுன் 29

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!