TNUSRB PC Exam: Test Yourself | பொதுத்தமிழ் வினா – விடை!! Day 6!!!
Q.1)பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை?
a)அம்மானை, ஊசல்,சிறுபறை
b)கழங்கு, அம்மானை, ஊசல்
c)சிற்றில், சிறுபறை,சப்பாணி
d)கழங்கு, சிறுபறை, ஊசல்
Q.2)மக்கள் கவிஞர் என்று போற்றப்படும் கவிஞர் யார்?
a)உடுமலை நாராயண கவி
b)கண்ணதாசன்
c)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
d)வாணிதாசன்
Q.3)கடுவெளிச் சித்தர் என்பது___
a)சிறப்புப் பெயர்
b)இயற்பெயர்
c)காரணப்பெயர்
d)பட்டப்பெயர்
Q.4)”மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது” இதில் அமைந்துள்ள மோனை –
a)அடிமோனை
b)ஒரூவு மோனை
c)முற்றுமோனை
d)இவற்றில் எதுவும் இல்லை
Q.5)”உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும்,
_________ அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே” -என்ற பாடல் எந்த பா வகையை சேர்ந்தது?
a)வஞ்சிப்பா
b)ஆசிரியப்பா
c)கலிப்பா
d)வெண்பா
Q.6)வேர்ச்சொல்லை தேர்வு செய்க : “பூண்டார்”
a)பூ
b)பூண்
c)பூமி
d)புவி
Q.7)இது எவ்வகை வாக்கியம் – ‘பாண்டியன் கதவைத் தட்டினான்
a)செய்வினை
b)எச்சவினை
c)எதிர்மறைவினை
d)செயப்பாட்டுவினை
Q.8)கொடுக்கப்பட்ட சொல்லிற்கு சரியான பொருளை கண்டறிக
A)ஆழிப்பெருக்கு | 1)அறிய விரும்பாமை |
B)மேதினி | 2)கடல்கோள் |
C)ஊழி | 3)உலகம் |
D)உள்ளப்பூண்டு | 4)நீண்டதொருகாலப்பகுதி |
a)2,3,4,1
b)4,3,2,1
c)3,2,4,1
d)4,3,1,2
Q.9)”புதுக்கவிதை வரலாற்றில் ஒரு துருவ நட்சத்திரம்” என்று புகழப்படுபவர் யார்?
a)பசுவய்யா
b)சிற்பி பாலசுப்பிரமணியம்
c)தருமு சிவராமு
d)மு. மேத்தா
Q.10)வெம்மை என்பதன் எதிர்சொல் என்ன?
a)வெண்மை
b)இன்மை
c)தண்மை
d)கருமை
Q.11)தெள்ளமுது என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக:
a)பண்புத்தொகை
b)வினையாலணையும் பெயர்
c)வினைத்தொகை
d)இரண்டாம் வேற்றுமைதொகை
Q.12)அறைதல் – பிரித்தெழுதுக
a)அ + றைதல்
b)அ + இறைதல்
c)அறை + தல்
d)அறைது + அல்
Q.13)ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக –சோ
a)மதில்
b)மேல்கூரை
c)சுவர்
d)கட்டிடம்
Q.14)மெய்முறை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக:
a)எண்ணும்மை
b)வேற்றுமைத்தொகை
c)வினையாலணையும் பெயர்
d)பண்புத்தொகை
Q.15)கீழ்க்கண்டவற்றில் கடறு என்பதன் பொருள் யாது?
a)மலை
b)நெருப்பு
c)மழை
d)காடு
Q.16)’தோட்டத்தில் பூச்செடி வளர்த்தேன்” – இது எவ்வகை வாக்கியம்?
a)பிறவினை
b)எதிர்மறைவினை
c)தன்வினை
d)எச்சவினை
Q.17)உண்மைக்கு அழிவில்லை அல்லவா என்பது எவ்வகை வாக்கியம் என கண்டறிக.
a)செய்தி வாக்கியம்
b)வினா வாக்கியம்
c)உணர்ச்சி வாக்கியம்
d)விழைவு வாக்கியம்
Q.18)’ உடுபதி ‘ என்பது குறிக்கும் பொருள்
a)சந்திரன்
b)எமன்
c)இந்திரன்
d)a&b
Q.19)கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
a)மறு, மறி, மனசு, மறுசொல்
b)மறி, மற, மறுசொல், மனசு
c)மறுசொல், மறு, மறி, மனது
d)மனச, மறு, மறி, மறுசொல்
Q.20)பின்வருவனவற்றில் முல்லை நிலத்திற்குரிய பண் எது?
a)செவ்வழிப்பண்
b)பஞ்சுரப்பண்
c)சாதாரிப் பண்
d)இவற்றில் எதுவுமில்லை