தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அண்மையில் வெளியானது. அதன் அடிப்படையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ந் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ந் தேதியும் தொடங்குகிறது. மேலும் முக்கிய தகவல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
முக்கிய தகவல்:
தமிழகத்தில் கொரோனா எழுச்சி காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2 ஆண்டுகளாக சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. எனவே மாணவர்கள் பாதுகாப்புக்காக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 2 ஆண்டுகளாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் குறைந்ததால், பிப். 1ல் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. கொரோனா தொற்றால் கடந்த வருடம் தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
மத்திய அரசில் தேர்வில்லாமல் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை..!
இருப்பினும் நடப்பு ஆண்டு 10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் (ரிவிஷன்) தேர்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான செய்முறை (பிராக்டிக்கல்) தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை நடைபெறும். பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடையும். பிளஸ்-1 தேர்வுகள் மே 9-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடியும். 10-ம் வகுப்புக்கான தேர்வுகள் மே 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடியும்.
தமிழகத்தில் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர்!
பிளஸ்-2 தேர்வு முடிவு ஜூன் 23-ந் தேதியிலும், பிளஸ்-1 தேர்வு முடிவு ஜூலை 7-ந் தேதியிலும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 17-ந் தேதியிலும் அறிவிக்கப்படும் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மொத்தமாக 26,76,675 பேர் தேர்வு எழுத உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,55,474 மாணவர்கள், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை 8,83,884 மாணவர்கள், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,37,317 பேர் எழுதுகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் முடிந்த பிறகு 2022-23-ம் கல்வி ஆண்டு, ஜூன் 13-ந் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.