குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்? அமைச்சரவை ஒப்புதல்!! அமைச்சர் தகவல்!!
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சி அமைத்தால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தது. தற்போது குஜராத்தில் சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பான தகவல்களை அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம்
இந்திய நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த 2019ம் ஆண்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. தற்போது இதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்தது.
Exams Daily Mobile App Download
அத்துடன் இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைக்கு உட்பட்டது எனவும் இதில் நீதிமன்றம் தலையிட உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வர போவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதில் உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்கள் அடங்கும். இதனை தொடர்ந்து குஜராத்திலும் தற்போது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அக்.30 ( நாளை) மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இது தொடர்பாக குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியிருப்பதாவது, மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அறிவுறுத்தல்படி, பொது சிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.