விராட் கோஹ்லி பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் – கேப்டன் பதவி குறித்து கெளதம் கம்பீர் கருத்து!
இந்தியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி சமீபத்தில் விலகினார். தற்போது இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கெளதம் கம்பீர் பேட்டி:
2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோஹ்லி ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தினால் (BCCI) நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து இந்தியாவின் ஒயிட்-பால் கேப்டனாக ரோஹித் சர்மாவை பிசிசிஐ கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவித்தது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து, கோஹ்லி டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். தற்போது விராட் கோஹ்லியின் இந்த முடிவு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 14 நாட்கள் தற்செயல் விடுப்பு!
கம்பீர் கூறுகையில், பேட்டிங்கில் கவனம் செலுத்தி ரன்களை குவிப்பதில் இனி விராட் கோஹ்லி முழுமூச்சாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கேப்டன் என்பது யாருடைய பிறப்புரிமையும் அல்ல என்று தெரிவித்தார். இதற்கு முன் MS தோனி தனது கேப்டன் பதவியை கொடுத்து விராட் கோலியின் கீழ் விளையாடினார் என்று விளக்கினார். இனி விராட் கோஹ்லி அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும், என்றும் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பூஸ்டர் சிறப்பு முகாம்!
இந்தியா ஜனவரி 19 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ரோஹித் சர்மா இல்லாததால், கே எல் ராகுல் அணியை வழிநடத்த உள்ளார். ஒரு நாள் தொடரில் கோஹ்லி அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கூறினார். அதேபோல் கடந்த ஆண்டு விராட் கோஹ்லி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றும் நாளை நடக்க இருக்கும் இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லி சதம் அடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.