கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – ஐஐடி அறிவிப்பு!!

0
கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - ஐஐடி அறிவிப்பு!!
கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - ஐஐடி அறிவிப்பு!!

கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – ஐஐடி அறிவிப்பு!!

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஐஐடி பாம்பே அறிவித்துள்ளது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து “கேட்” (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை இல்லாமல் இப்படிப்புகளை படிக்கவும் கேட் தேர்ச்சியை எதிர்பார்க்கின்றன.

கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும்.

மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 25 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்படி மாணவர்கள் அக்டோபர் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கேட் தேர்வை நடத்தும் ஐஐடி பாம்பே அறிவித்துள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!