மத்திய அரசு நிறுவனத்தில் திருநங்கையருக்கான வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரைகளின் படி, தமிழகத்தின் சென்னையில் பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு இல்லம் துவங்கப்பட உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு சாரா அமைப்பாக செயல்பட உள்ள இந்த அமைப்பில் திருநங்கையருக்கான பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சென்னை மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பினை உருவாக்குவது மற்றும் திருநங்கையரின் நலன் மேம்பாட்டு ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டு இந்த அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
காலிப்பணியிடங்கள் :
திட்ட மேலாளர். கணக்காளுமை உதவியாளர், ஆற்றுப்படுத்துனர், பகுதி நேர மருத்துவர், சமையலர், சுத்தம் செய்பவர், காவல் பணியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தகுதிகள் :
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க திருநங்கையருகே முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும் தகுதியான ஆண் மற்றும் பெண் பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தினை உரிய முகவரியில் சமர்ப்பிப்பதன் மூலம் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
கரிமா க்ரஹ், சி 122/ 69, கார்த்திகேயன் சாலை, பெரியார் நகர், சென்னை- 82 என்ற முகவரிக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ வரும் 31.05.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்துகிறோம்.
Sutham seibavar velai na 10th mudichirken