தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் – இந்து மக்கள் கட்சியின் பரபரப்பு தகவல்!
தமிழகத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி கொரோனா நடவடிக்கையாக தமிழ் அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துக் செல்லவும் தடை விதித்துள்ளது. இதை மீறி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்று இந்து மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
விநாயகர் சிலைகள்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கத்தை கட்டுக்குள் வைப்பதற்காக அரசு பல வழிகளிலும் முயன்று வருகிறது. தற்போது தான் மாநிலத்தில் மெல்ல தொற்று பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும், மேலும் பாதுகாப்பு எச்சரிக்கை தேவை என்பதை உணர்ந்த தமிழக முதல்வர் செப்டம்பர் 15ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அறிவிப்பின் போது வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் உதவித்தொகை இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!
அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிப்பதாகவும், வீடுகளில் வைத்து வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்தது. முன்னதாகவே, இந்து முன்னணி தலைவர் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புவதாகவும், அனுமதி அளிக்காத பட்சத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை நடத்துவோம் என்று அறிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், தற்போது இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், டாஸ்மாக் கடைகளில் எந்தவிதமான தனிமனித இடைவெளியும் இன்றி இயங்கி கொண்டிருக்கும் நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடத்துவதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார். மேலும், இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகள் தடையை மீறி தமிழகம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்படும் என்று அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.