தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் – ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்து முன்னணி சார்பில் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழா
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து இந்து முன்னணி சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தமிழக மக்களால் கொண்டாடப்பட இருக்கிறது.
2 ஆண்டுகளுக்கு பின் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதால் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டு 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளி கல்வித்துறை தகவல்!
Exams Daily Mobile App Download
இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் காவல்துறை அனுமதி பெற்று சிலைகளை அமைக்க மாவட்ட நிர்வாகிகள் பணிகளை செய்து வருகின்றனர். மேலும் சிலைகளை நிறுவிய பிறகு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் போலீசார் சுற்றறிக்கைகளை தயாரித்துள்ளனர். இதில் சிலைகள் இருக்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்