தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள் – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிகாட்டுதல்கள் – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

பொதுநல வழக்கு:

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பொது இடங்களில் விநாயகரின் சிலையை வைத்து பண்டிகை நிறைவடையும் போது ஆற்றில் அல்லது கடலில் சென்று கரைப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அரசு தடை விதித்தது. தற்போது நடப்பாண்டில் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வர உள்ளது.

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் புதிய திட்டம் – நீர்வளத்துறை அமைச்சர் அறிவிப்பு!

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிகளை அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தமிழக அரசு மற்றும் டிஜிபி அவர்களுக்கும் மனு அளித்துள்ளதாகவும், ஆனால் அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊர்வலம் ஏதுமின்றி மிகவும் எளிமையாக விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தது. தற்போது நடப்பாண்டில் கொரோனா பரவல் அச்சம் குறைந்து அரசு பல தளர்வுகளையும் அளித்துள்ளது. அதன்படி, தகுந்த சமூக இடைவெளியுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த இந்து முன்னணி மாநில நிர்வாக குழு முடிவு செய்துள்ளது என்று அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புவதாகவும், அனுமதி அளிக்காத பட்சத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை நடத்துவோம் என்று இந்து முன்னணி தலைவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!