விநாயகர் சதுர்த்தி விழாவை மூன்று நாட்கள் மட்டும் கொண்டாட அனுமதி – மாநகராட்சி அறிவிப்பு!

0
விநாயகர் சதுர்த்தி விழாவை மூன்று நாட்கள் மட்டும் கொண்டாட அனுமதி - மாநகராட்சி அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தி விழாவை மூன்று நாட்கள் மட்டும் கொண்டாட அனுமதி - மாநகராட்சி அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தி விழாவை மூன்று நாட்கள் மட்டும் கொண்டாட அனுமதி – மாநகராட்சி அறிவிப்பு!

நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விமர்சியாக கொண்டாடப்படும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக அரசு விநாயர் சதுர்த்தி விழாவினை மூன்று நாட்கள் மட்டும் கொண்டாட அனுமதி வழங்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி:

நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் ஆண்டுதோறும் விநாயர் சதுர்த்தி பண்டிகை விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் கொரோனா அச்சத்தால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கர்நாடக அரசு விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால்டிக்கெட் – இன்று வெளியீடு!

அதன்படி, கர்நாடகா அரசு 5 நாட்கள் விநாயர் சதுர்த்தி விழாக்கள் நடத்த அனுமதி அளித்த நிலையில், பெங்களூரு மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் 3 நாட்கள் மட்டுமே விநாயர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து பிரகத் பெங்களூரு மஹாநகர பலிகே (பிபிஎம்பி) தலைமை ஆணையர் கவுரவ் குப்தா கூறுகையில், பெங்களூரு நகரில் மூன்று நாட்களுக்கு மேல் விநாயகர் திருவிழா கொண்டாட அனுமதிக்கப்படாது. சிலையை கொண்டு வரும்போது அல்லது மூழ்க செய்யும் விழாவின் போது எந்த ஊர்வலமும் கூடாது என தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – தலைமைச் செயலர் இன்று ஆலோசனை!

மேலும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் வீட்டில் அல்லது நம் மொபைல் டேங்கில் மூழ்கடிக்க வேண்டும். பொது இடங்களில் நிறுவப்படும் விநாயகர்கள் நான்கு அடி உயரத்தில் இருக்க வேண்டும். அவற்றையும் நமது மொபைல் டேங்குகளில் மூழ்கடிக்க வேண்டும். அதற்காக தொட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏரிகளில் சிலைகளை மூழ்கடிப்பதை தடை செய்துள்ளோம். கடந்த ஆண்டும் பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா மூன்று நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டது. அது இந்த ஆண்டும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!