சென்னையில் ஜி-20 கல்வி பணிக்குழு மாநாடு – புதிய மாற்றங்கள் உருவாகும்.. கல்வித்துறை செயலாளர் நம்பிக்கை!!

0
சென்னையில் ஜி-20 கல்வி பணிக்குழு மாநாடு - புதிய மாற்றங்கள் உருவாகும்.. கல்வித்துறை செயலாளர் நம்பிக்கை!!
சென்னையில் ஜி-20 கல்வி பணிக்குழு மாநாடு - புதிய மாற்றங்கள் உருவாகும்.. கல்வித்துறை செயலாளர் நம்பிக்கை!!
சென்னையில் ஜி-20 கல்வி பணிக்குழு மாநாடு – புதிய மாற்றங்கள் உருவாகும்.. கல்வித்துறை செயலாளர் நம்பிக்கை!!

ஜி – 20 மாநாட்டின் கல்வி பணிக்குழு மாநாடு சென்னை ஐஐடியில் 3 நாட்கள் நடைபெற்றது. இது குறித்து பேசிய மத்திய கல்வித்துறை செயலாளர் ஜி – 20 கல்வி பணிக்குழு கூட்டத்தால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கல்வி பணிக்குழு மாநாடு:

20223 ஆம் ஆண்டுக்கான ஜி – 20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஜி 20 மாநாட்டின் முதல் கருத்தரங்கம் புதுவையில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கல்வித்துறை சார்பில் ஜி – 20 மாநாடு சென்னை ஐஐடி-யில் கடந்த ஜன.31 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தலைமை வகித்தார்.

அதிரடியாக உயரும் பெட்ரோல், டீசல் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி! கேரளா அரசு அறிவிப்பு!!

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த ஜி – 20 மாநாட்டில் 30 நாடுகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இந்தியா அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவு, ஆராய்ச்சி தொழில் நுட்பம், வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது. இதனை ஒப்புக்கொண்ட நாடுகள் அதனை சாத்தியமாக்குவதற்கான திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

மேலும் ஒவ்வொரு நாடுகளும் தாங்கள் பின்பற்றும் கல்வி நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்து கருத்துக்களை பரிமாறி கொண்டனர். இந்த ஜி – 20 கல்வி பணிக்குழு கூட்டம் குறித்து பேசிய மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் ஜி – 20 கல்வி பணிக்குழு கூட்டத்தால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!