கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு – மத்திய அரசு விளக்கம்!

0
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு - மத்திய அரசு விளக்கம்!
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு - மத்திய அரசு விளக்கம்!
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு – மத்திய அரசு விளக்கம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 இழப்பீட்டு தொகை மாநிலங்கள் சார்பில் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதனை எளிதாக்கும் வகையில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பம் இழப்பீட்டை பெற இணையதளம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய இணையதளம் உருவாக்கம்

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 4.45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோயினால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களும் இந்த தொற்றில் பலியாகி வருகின்றனர். அவர்களின் குடும்பம் அதன் பிறகு நிர்கதியாக நிற்கும் அபாயம் இருந்து வருகிறது. இவ்வாறு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்கள் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையை அடைகின்றன. அதனால் ஒன்றிய அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு சிறிய இழப்பீட்டுத் தொகையை வழங்க திட்டமிட்டது.

டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் இனிவரும் காலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடர் காலங்களில் பணியாற்றும் போதும், நிவாரண பணிகளின் போதும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு தொகையை அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஒன்றிய அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பற்றிய விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது.

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வு அறிவிப்பு 2021 – தாமதம் ஏன்? தேர்வாணையம் விளக்கம்!

இதனை எளிதாக்கும் வகையில் அவர்களைப் பற்றிய விவரத்தை பதவியேற்றம் செய்வதற்கான ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் சரியான நேரத்தில் தங்களது இழப்பீடுகளை பெற முடியும். அதை உறுதி செய்யும் விதமாக இன்னும் 2 வாரங்களில் இணையதளம் உருவாக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்கள் பொருளாதார நிலையில் சற்று மேம்படுவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!