தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? ஓமைக்ரானை தொடர்ந்து “பிஏ 2” வைரஸ் அச்சம்!
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை தொடர்ந்து புதிய வகை “பிஏ 2″வைரஸ் தொற்று தாக்கத்தின் அடிப்படையில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் குறைந்து வருவதால் , மாநிலம் முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு நடவடிக்கைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிப்ரவரி 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 19ம் தேதி சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு, நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22ம் தேதி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், பொது மக்களும் முறையாக கடைபிடிக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓமைக்ரான் வைரஸை தொடர்ந்து, பிரிட்டன் நாட்டில் “பிஏ 2” வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை உடையதாகவும் மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்று ஜப்பான் நாட்டைைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த புதிய “பிஏ 2” வைரஸ் இந்தியாவில் பரவும் பட்சத்தில் தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் போன்றவை மீண்டும் அமலாக வாய்ப்பு உள்ளது. இந்த பிஏ 2 வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தை பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.