தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு? பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டாலும் இன்னும் 2 வாரங்களுக்கு பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு, எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்று எச்சரித்திருந்த நிலையில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. கட்டுக்கடங்காமல் பரவி வரும் வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியாக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பல கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்தது.
மதுரை TVS பள்ளியில் LKG மாணவர் சேர்க்கை இன்று முதல் துவக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனால் அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவற்றை ரத்து செய்தது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியுள்ளது. மேலும் மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து விட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு துறைகளில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் – இணையமைச்சா் அறிவிப்பு!
நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். அப்பகுதியில் பள்ளிகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் இரு வாரங்களுக்கு பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் இரு வாரங்களுக்கு பிறகு அதாவது பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் முடிவடைந்த பிறகு மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தேர்தலுக்காகவே ஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது.