தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதையொட்டி மீண்டும் முழு ஊரடங்கு? பரபரப்பு கடிதம்!

0
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதையொட்டி மீண்டும் முழு ஊரடங்கு? பரபரப்பு கடிதம்!
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதையொட்டி மீண்டும் முழு ஊரடங்கு? பரபரப்பு கடிதம்!
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதையொட்டி மீண்டும் முழு ஊரடங்கு? பரபரப்பு கடிதம்!

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளுமே தளர்த்தப்பட்டது. பின்பு, மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. பழையபடி பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.100க்கும் குறைவான விலையில் அசத்தலான ரீசார்ஜ் திட்டங்கள்!

இதற்கு நடுவே இங்கிலாந்து, ஸ்பெயின், சுவீடன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் குரங்கம்மை என்கிற நோயும் தற்போது தீவிரமாக பரவி வருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசியும் இரண்டு தவணைகளில் செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை 93.74% பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மேலும், 82.55% பேர் இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர். 43 லட்சம் பேர் ஒரு தவணை தடுப்பூசியை கூட செலுத்தி கொள்ளவில்லை. இதனால் கொரோனா பரவுவதை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்கிற அச்சமும் மக்களிடையே நிலவி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!