இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை!
உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நான்காவது அலை குறித்த அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அண்டை நாடான சீனாவில் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
மீண்டும் முழு ஊரடங்கு அமல்:
கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்து கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனிடையே சீனாவில் அண்மை காலங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில், எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று காரணமாக, சீனாவில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் சீனா அரசு செய்வதறியாது தடுமாறி வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா பரவலால் ஊரடங்கு அச்சம் – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு!
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, தமிழகம், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இதனால் நான்காவது அலை குறித்த அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரசை எந்தவொரு நாடும் முழுமையாக அழிக்கவில்லை. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸுடன் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டது. தமிழகத்தை பொறுத்த வரையில், சென்னையில் ஐஐடி வளாகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே தமிழ்நாட்டில் பாதிப்பை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பின் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகிய விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.
ExamsDaily Mobile App Download
நாடு முழுவதும் பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உச்சத்தை தொட்டு வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசுடன் மம்தா பானா்ஜிக்கு கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில், ஏற்கெனவே நடைபெற்ற கொரோனா பாதிப்பு நிலவர கூட்டங்களை சிலமுறை மம்தா புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.