இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் மோடி எச்சரிக்கை பதிவு!
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் கொரோனா குறித்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள எச்சரிக்கையால், மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற அச்சம் நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எச்சரிக்கை பதிவு:
கொரோனா பரவலை அடுத்து, 2020 மார்ச் 24 அன்று பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டது. பின், அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகளை 31ம் தேதி முதல், முழுதும் விலக்கிக் கொள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோயில் நிறுவன தினத்தையொட்டி இன்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் திட்டம்! அரசாணை வெளியீடு!
இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி முலம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் இந்தியாவில் நோய் தொற்றை கட்டுப்படுத்த 85 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் ஆதரவால் மட்டுமே சாத்தியம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று நான் கூறவில்லை, இந்தியாவை விட்டு கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பல்வேறு புதிய வடிவங்களை மாற்றி மீண்டும் மீண்டும் கொரோனா பரவுகிறது. எனவே கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை குறைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரசாயன உரங்களின் பாதிப்பில் இருந்து பூமியை காக்க இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் திரும்ப வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் இரத்தசோகை பாதிப்புள்ள பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க கிராம அளவில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ஏரிகள் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் இருந்த நடவடிக்கைகள் அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை என்று கூறியது எச்சரிக்கை பதிவு போல் உள்ளது. இதன்படி இந்தியாவில் எந்த நேரமும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.