கேரளாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று – முழு ஊரடங்கு அமலாகுமா?

0
கேரளாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று - முழு ஊரடங்கு அமலாகுமா?
கேரளாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று - முழு ஊரடங்கு அமலாகுமா?
கேரளாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று – முழு ஊரடங்கு அமலாகுமா?

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதையடுத்து அம்மாநிலத்தில் முறையான நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால், நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ள சூழலில், கேரளாவில் ஏற்படும் புதிய பாதிப்புகள் மற்ற மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதாவது இந்தியாவில் தினசரி பதிவு செய்யப்படும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், பாதியளவு பாதிப்புகள் கேரளா மாநிலத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பு கேரளாவின் அண்டை மாநிலங்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

வாகன நம்பர் பிளேட்களில் அளவு நிர்ணயம் – மீறினால் அபராதம்! முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் கேராளாவில் இருந்து வருகை தருபவர்களுக்கு தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று விகிதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கு விதிப்பதை தவிர மாற்று வழியில்லை என அம்மாநில அரசுக்கு அறிவுத்தப்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் அம்மாநிலம் முழுவதும் தற்போது கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், இரண்டு வாரங்களில் அதாவது செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைய தொடங்கும் என்று மத்திய அரசின் நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இந்த வார தொடக்கத்தில் மாநிலத்தின் தற்போதைய கொரோனா நிலைமையை ஆய்வு செய்தார். ஓணம் பண்டிகைக்கு பிறகு, வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்கள் உத்தரவுகளை மீறியது மோசமான நிலைமைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இருந்தாலும் தற்போதுள்ள சூழலில் சில முக்கியமான நோய் தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டால் நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரலாம். அந்த வகையில் கடலோர மாநிலங்கள், மலைப் பகுதிகள், சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் கேரளாவில், கொரோனா இறப்பு விகிதம் 0.51 சதவிகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!