தமிழகம் முழுவதும் அமலாகும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

0
தமிழகம் முழுவதும் அமலாகும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
தமிழகம் முழுவதும் அமலாகும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
தமிழகம் முழுவதும் அமலாகும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா எனவும், என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர இருக்கிறது என்பது குறித்தான அறிவிப்பை சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்ற ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். இது மட்டுமல்லாமல் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டும் எனவும், அப்படி வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மே மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விபரம் இதோ!

இதுவரை தமிழகத்தில் 91.5 சதவீதத்தவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மேலும், 74.75 சதவீதத்தவர்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் மற்றும் 1.48 கோடி பேர் இன்னும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். ஓரளவுக்கு கொரோனா தடுப்பூசியை மக்கள் செலுத்தி கொண்டதால் தான் கொரோனா பரவல் குறைந்து வந்தது. மக்களும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சில நாட்களாக தான் சுதந்திரமாக தெருக்களில் நடமாட துவங்கினர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. தலைநகரான டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் தடுப்பூசியை செலுத்தும் பணியை தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!