இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு என்ன?

0
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமர் மோடி எடுக்கும் முடிவு என்ன?
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் - பிரதமர் மோடி எடுக்கும் முடிவு என்ன?
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு என்ன?

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,980 லிருந்து 17,801 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முழு ஊரடங்கு அமல்:

கடந்த 2 வருடமாக மொத்த உலகமும் கொரோனா தொற்றில் சிக்கி உள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமே மிகுந்த நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது. தற்போது கொரோனா மீண்டும் தலைத்தூக்கி உள்ளது. கொரோனா 2வது அலை, போல இந்த நான்காம் அலையும் அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்ற பெரும் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில், கடந்த மாதம் முதல் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க சீன அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. கொரோனா பரவல் ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் தற்போது கோரத் தாண்டவமாடி வருகிறது.

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை ஆய்வு மையம் அறிக்கை!

இந்தியாவிலும், தலைநகர் டெல்லி, தமிழகம், மத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மீண்டும் கையில் எடுத்து உள்ளன. டெல்லி, தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், பொது மக்கள் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,377 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன் தினம் 2,927; நேற்று 3,303 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 3,377 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 4,30,68,799 லிருந்து 4,30,72,176 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,496 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

Exams Daily Mobile App Download

இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,30,622 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 5,23,753 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!