இந்தியாவில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? மாநிலங்களில் அதிகரிக்கும் புதிய பாதிப்புகள்!

0
இந்தியாவில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? மாநிலங்களில் அதிகரிக்கும் புதிய பாதிப்புகள்!
இந்தியாவில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? மாநிலங்களில் அதிகரிக்கும் புதிய பாதிப்புகள்!
இந்தியாவில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? மாநிலங்களில் அதிகரிக்கும் புதிய பாதிப்புகள்!

தற்போது டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தவிர்க்க விரும்பினால் நோய்த்தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முழு ஊரடங்கு

இந்தியாவில் தற்போது உயர்ந்து வரும் புதிய கொரோனா பாதிப்புகள் காரணமாக நான்காவது அலை உருவாக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தலைநகர் டெல்லியுடன் சேர்த்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடர்ச்சியாக கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில், லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகளைத் தவிர்க்க விரும்பினால் விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை – அரசு அறிவிப்பு!

இதற்கு முன்னதாக நாடு முழுவதும் கொரோனா வழக்குகள் குறைந்த பிறகு, மக்கள் முகக்கவசம் அணிவதை நிறுத்திவிட்டனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் இக்கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்தன. ஆனால் இப்போது வழக்குகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் நோய்த்தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது சீனா உட்பட வேறு சில நாடுகளில் கொரோனா வழக்குகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவில் உள்ள மக்களும் முகக்கவசம் அணிந்து கைகளை சுத்தம் செய்யும் பழக்கத்தைத் தொடங்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இப்போது கர்நாடகாவில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு உள்ளதாகவும் இது தொற்றுநோயின் நான்காவது அலையாக மாற வாய்ப்புகள் இருக்கிறது என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அதனால் கர்நாடகாவில் உள்ள மக்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல டெல்லி, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!