நாடு முழுவதும் இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு – அரசு அறிவிப்பு!
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. அதனால் பிரதமர் ராஜபக்சே பதவி விலகி தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமையை கட்டுப்படுத்த இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் மக்களின் பல போராட்டங்களுக்கு பின் பிரதமர் மகிந்த ராஜபக்சே கடந்த 9 ஆம் தேதி பதவி விலகினார். அதனால் ராஜபக்சே ஆதரவாளர்கள் மக்களுக்கு எதிராக திரண்டனர். அதனால் இலங்கையில் பல இடங்களில் கலவரம் வெடித்தது. அரசியல் தலைவர்களுக்கு சொந்தமான பல இடங்கள் நாசம் செய்யப்பட்டு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் PM KISAN கிரெடிட் கார்டு வைத்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன. இந்நிலையில் மக்கள் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிற்கு எதிராக செய்யும் போராட்டங்களுக்கு புதிய பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போது வரை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்.பிக்களின் வீடுகள் தீ வைத்து நாசம் செய்யப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இலங்கையில் தற்போது போராட்டங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. பல இடங்களில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் புத்த பூர்ணிமாவை தொடர்ந்து இன்று ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் மக்கள் விழாவில் பங்கேற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.